rasahjaya hinduyouth

HOT NEWS

HOME
HOT NEWS
OBJECTIVE
MANAGEMENT
HINDUISM
FUTURE ACTIVITY
ACTIVITYS
ALBUM
HYO WOMEN
NEWS
HYO YOUTH
RELATED LINKS
MEDIA LINK
CONTACT US


vanakkam>>>hot news on line>>>hyorasah jaya>>>>enjoy it>>>>hyorasah 

  தேதி : 16/2/08 (Fri) 12:00 am

ம.இ.கா. வேட்பாளர் பட்டியலில் புதிய முகங்கள்

கோலாலம்பூர், பிப் 15- ம.இ.கா, வரும் பொது தேர்தலில் பல புதிய வேட்பாளர்களை அறிமுகப் படுத்தியிருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு இன்று தெரிவித்தார். மார்ச் 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் ம.இ.கா.வைப் பிரதிநிதித்து பல புதிய முகங்கள் களமிறக்கப் படுவார்கள் என்றார் அவர்.

இது நம்முடைய ஆரம்பக் கட்ட பணி. இன்னும் அதிகமான மாற்றங்கள் இடம்பெறும் என அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார். மாநில சட்டமன்றங்களுக்கு 80 விழுக்காட்டினர் புதிய முகங்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் நாடாளுமன்றத்தில் 30 விழுக்காடு புதிய முகங்கள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டில் ம.இ.கா நாடாளுமன்றத்திற்கான 9 சீட்டுகளையும் வென்றது. இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 19 மாநில சட்டமன்ற சீட்டுகளையும் அது தக்க வைத்துக் கொண்டது. இதே வெற்றி இம்முறையும் தக்க வைத்துக் கொள்ளப்படும் என டத்தோஸ்ரீ சாமிவேலு நம்பிக்கை தெரிவித்தார்.


விதிமுறைகளை மீற வேண்டாம்

கோத்தா பாரு, பிப் 15- பொது தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளும்போது உணர்ச்சிகரமான விவகாரங்களை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொது தேர்தல் தங்கு தடையின்றி சரளமாக நடைபெறுவதற்கு எல்லா தரப்பும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென கிளந்தான் துணை தலைமை போலீஸ் அதிகாரி அமீர் ஹம்சா இப்ராஹிம் தெரிவித்தார். இன விவகாரம், அவதூறு, வெறுப்புணர்வு போன்றவற்றை கிளற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


தேசிய முன்னணி மக்களுக்கு வஞ்சனை செய்யாது

கோத்தா பாரு, பிப் 15- மக்களுக்கு சன்மானம் வழங்குவதில் தேசிய முன்னணி அரசாங்கம் வஞ்சனையாக செயல்படாது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ முகமட் நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

சன்மானம் வழங்க வேண்டும் என்ற காலம் வரும்போது அரசாங்கம் தாராளப் போக்கை கடைபிடிக்கும் என்றார் அவர். அரசு தொடர்புடைய நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் லாபங்களை போனஸ், சம்பள ஒருங்கிணைப்பு போன்றவற்றின் வழி மீண்டும் அதன் ஊழியர்களுக்கே வழங்கப்படும் என அவர் சொன்னார்.

நாட்டின் சுபிட்சத்திற்காக கடந்தாண்டு பொது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசாங்கத்தின் பரிவுமிக்க பார்வை கிளந்தானின் மீது மேம்பாட்டு திட்டங்கள் வழி பதியப்பட்டிருக்கிறது என அவர் கூறினார்.


கணவரின் வெற்றிக்காக மனைவிமார்கள் பாடுபட வேண்டும்

கோத்தா பாரு, பிப் 15- பொது தேர்தலுக்கு தேர்ந்தேடுக்கப்படும் வேட்பாளர்களுக்கு உதவியாக அவர்களின் துணைவியர்கள் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என துணைப்பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரொஸ்மா மன்சோர் கேட்டுக் கொண்டார். தங்களின் கட்சி வெற்றி பெறுவதை குறிப்பாக கிளந்தானில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கு  இது அவசியம் என்றார் அவர்.

இதுவரையில் மக்கள் பிரதிநிதிகளின் துணைவியர்கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் எனக்கு திருப்தியளிக்கிறது. அவர்கள் மிக உற்சாகமாக மக்களைச் சென்று சந்திக்கின்றனர். கணவரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யாமல் தேசிய முன்னணியின் வெற்றிக்காவும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கிளந்தானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு பேசினார்.


'ஜெண்டில்மேனாக' நடந்து கொள்ளுங்கள் - கேவியஸ்

கோலாலம்பூர், பிப் 15- பிபிபிக்கு கொடுக்கப்பட்ட இடங்களை மீண்டும் அக்கட்சிக்கே கொடுப்பதில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.சீச. கெராக்கான், ம.இ.கா. ஆகியவை 'ஜெண்டில்மேன்' போக்கை கடைபிடிக்க வேண்டும் என பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ எம். கேவியஸ் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மூன்று கட்சிகளின் பொது செயலாளர்களுக்கும் பிபிபி கடிதம் அனுப்பிவிட்டதாகவும் இதுவரையில் எவ்வித முடிவும் தெரியவில்லை எனவும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்கடிதம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அதே கடிதம் இம்முறையும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் நகல் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கடிதம் வழி அவர்கள் பதில் அளிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார் அவர். அதில் உள்ள கருத்தை  ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் சரி எந்த முடிவாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்பு பிபிபி கட்சிக்கு பேரா மாநிலத்தில் 4 நாடாளுமன்ற தொகுதிகளும் 12 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கித் தரப்பட்டன.


வெடிகுண்டு கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், பிப் 15- இங்குள்ள ஜாலான் ராஜா மூசா பதுல் அஸிஸ் முன்புறத்தில் உள்ள நடைபாதையில் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விஸ்மா பெர்னாமாவிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதைத் தொடர்ந்து ஜாலான் ராஜா மூடா அப்துல் அஸிஸின் இருவழி பாதையும் மூடப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் ஜாலான் துன் ரசாக் பாதை நெரிச்சலானது.


'லிங்கம்' விசாரணை: விண்ணப்ப மனு நிராகரிப்பு

கோலாலம்பூர், பிப் 15- டத்தோ வி.கே. லிங்கம் படக்காட்சி விசாரணைக் குழுவிலிருந்து இருவரை நீக்கக் கூறி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டத்தோ மகாதேவ் சங்கரனும் எமெரிதியூஸ் பேராசிரியர் டத்தோ டாக்டர் கோ காய் கிம்மும் நிராகரித்தனர்.

வர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என்பதோடு உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி அவர்கள் அந்த மனுவை நிராகரித்தனர்.யூசோப் சின், மகாதேவ் சங்கரின் ஆணையர் தகுதியை ரத்து செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார். லிங்கம் ஏற்பாட்டில் மகாதேவ் கண் சிகிச்சைப் பெற்றுக் கொண்டதை அவர் காரணம் காட்டினார். அதே சமயம் கோவின் தகுதியை ரத்து செய்யக் கூறி லிங்கம் விண்ணப்பப்பித்திருந்தார். எனினும் இருவரது விண்ணப்பமும் இன்று நிராகரிக்கப்பட்டது.


டத்தோ‚ சாமிவேலுவின் நிலை - பிரதமர் விளக்கம்

கோலாலம்பூர், பிப் 15- வேட்பாளர் நியமனப் பட்டியலில் ம.இ.கா. தேசிய தலைவர் டத்தோ‚ ச.சாமிவேலுவின் பெயர் இடம்பெறாமல் போகலாம் எனக் கூறி பிரதமர் டத்தோ‚ அப்துல்லா அகமட் படாவி  ஒட்டுமொத்த மலேசிய இந்திய சமூகத்தை புருவம் உயர்த்தச் செய்திருக்கிறார்.

வரும் 12ஆவது பொதுத் தேர்தலில் டத்தோ‚ ச.சாமிவேலு தேர்தலில் நிற்கும் வாய்ப்புக் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் இது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் ஒருவேளை ம.இ.கா வேட்பாளர் நியமனப்பட்டியலில் டத்தோ‚ சாமிவேலு தமது பெயரைக் குறிப்பிடாமல் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பட்டியலில் என்ன உள்ளது என்பது எனக்கு தெரியாது. முதலில் அதை பார்க்கிறேன். ஆகையால் என்னை கேள்வி கேட்க வேண்டாம். ஏனெனில் நான் இன்னும் நியமனப் பட்டியலைப் பார்க்கவில்லை என்றார்.இதனிடையே சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடப் போவதாக டத்தோ‚ சாமிவேலு அறிவித்திருப்பது குறித்து கருத்துரைத்த பிரதமர் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானால் பத்திரிகையிடம் தெரிவிக்கலாம்.

பின்னால் அவர்கள் வேறு எதையாவது செய்ய வேண்டியதுதான் என்றார்.மார்ச் 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் தேசிய முன்னணியைச் சேர்ந்த சில தலைவர்களின் நிலை குறித்து பிரதமர் டத்தோ‚ அப்துல்லா அகமட் படாவி கருத்துரைக்க மறுத்துவிட்டார். வேட்பாளர் பெயர்பட்டியலை தாம் இன்னும் பார்க்கவில்லை என்பதைக் காரணம் காட்டி அவர் சில தலைவர்களின் நிலைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.

செய்தியாளர்கள் தேசிய முன்னணி தலைவர்கள் பற்றிய நிலை குறித்து துருவி துருவி கேள்வி கேட்டபோது பிரதமர் நான் இன்னும் பார்க்கவில்லை என்பதையே பதிலாகத் தந்தார்.
அம்னோ உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒரு கட்சி தங்களின் தலைவர்களையே தேர்தெடுத்திருக்கிறார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை இல்லை என்றால் நாம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என அவர் சொன்னார்.


தேர்தல் பிரச்சாரத்திற்கு 13 நாட்கள் போதுமானது

கோலாலம்பூர், பிப் 15- இம்முறை பொது தேர்தல் பிரச்சாரதிற்காக நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இது எல்லா தரப்பினருக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு போதுமான காலவசகாசமாக அமைந்திருக்கும் என அம்னோ தகவல் துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் முஹமட் தாய்ப் தெரிவித்தார். இம்முறை 13 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது நீண்ட கால அவகாசமாகும். எல்லா தரப்பினருக்கும் போதுமான வாய்ப்பாக அமையும் என்றார் அவர். கடந்த பொது தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு போதுமான கால அவகாசம் வழங்கப் படவில்லை என எதிர்கட்சியினர் புகார் தெரிவித்திருந்தனர். இப்போது போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான எதனையும் பேசலாம். தேசிய முன்னணிக்கும் மக்களுக்கு விளக்கமளிக்க போதுமான காலம் உள்லது என்றார் அவர். அம்னோ உச்சமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு பின்னர் அவர்
செய்தியாளர்களிடம் பேசினார்.


அன்வாரை நாங்கள் மறந்து விட்டோம்

கோலாலம்பூர், பிப் 15- முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்காக 12ஆவது பொது தேர்தலை முன்கூட்டியே அரசு நடத்துவதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி வன்மையாக மறுத்துள்ளார்.

நாங்கள் அன்வாரை மறந்து விட்டோம். இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கெஅடிலான் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தேர்தலில் நிற்கலாம் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
12ஆவது பொது தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் தாக்கல்  இம்மாதம் 24ஆம் தேதியும் மார்ச் 8ஆம் தேதி தேர்தலும் நடைபெறுகிறது.


தொகுதி பâமாற்றத்தில் ஆட்சேபம் இல்லை

கோலாலம்பூர், பிப் 15- தேசிய முன்னணி சார்ப்பாக போட்டியிடுகின்ற உறுப்புக் கட்சி வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதியை பரிமாறிக் கொள்ள விருப்பப்படலாம். ஒருவேளை  இரு தரப்பு வேட்பாளர்களும் விருப்பம் தெரிவித்தால் அது குறித்து எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் யாரும் இட பறிமாற்றம்  செய்வதாக தன் காதுகளுக்கு எட்டவில்லை என்றார் அவர். இது ஒன்றும் மிகவும் கடினமான காரியம் இல்லை. இட பâமாற்றத்தில் இரு தரபினரும் இணக்கம் காண வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆர்வம் காட்டி மற்றொன்று ஒத்துப்போகவில்லை என்றால் இது சாத்தியப்படாது என்றார் அவர். அம்னோ உச்சமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


வாக்குச் சீட்டில் இனி குறியீடு எண் இல்லை

கோலாலம்பூர், பிப் 15- வாக்கு சீட்டில் இனி குறியீடு எண் இருக்காது என்பதால் வாக்காளர்களைப் பற்றிய விவரம் ரகசியம் காக்கப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் வாக்குச் சீட்டில் குறியீடு எண் குறிப்பிடப்படிருந்தது. இது வாக்காளர்களைப் பற்றிய ரகசியம் காக்கப்படாமல் இருப்பதற்கு வாய்ப்பாக அமையும் என பல வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.  வாக்களிக்கும்போது அருகில் உள்ள அதிகாரி பதிவு எண்ணை வாக்கு சீட்டில் குறித்துக் கொள்கின்றனர். இது தேர்தல் ஆணையத்தின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதால் இந்த அதிருப்தி நிலை நிலÅ¢ வந்தது. ஆனால் இனி அத்தகைய சூழல் ஏற்படாது என அவர் சொன்னார்


தேர்தல் செயல்முறை குறித்து பேரரசருக்கு கடிதம் - பாஸ் அனுப்புகிறது

கோலாலம்பூர், பிப் 15- ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள தேர்தல் செயல்முறைகள் குறித்து மாட்சிமை தங்கிய பேரரசருக்கு ' ¬ð§ºÀì கடிதம்' ஒன்றை அனுப்பவுள்ளதாக பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் தெரிவித்தார்.
வரும் 12ஆவது பொது தேர்தலில் பாஸ் பங்கெடுக்கும் என்றாலும் அதில் காணப்படும் சில Ì¨ÈôÀ¡Î¸¨Ç பேரரசர் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக அவர் சொன்னார்.


பிரதமÕìÌ §À¡ðÊ யார்?

பினாங்கு, பிப் 14- பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவியை எதிர்த்து யாரை களமிறக்குவது என்பதை பினாங்கு மாநில பாஸ் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு மண்ணின் மைந்தர் ஒருவரையே வேட்பாளராக தாம் தேர்ந்தெடுòதிருந்தாலும் இறுதி முடிவு மத்திய பாஸ் கட்சியின் கையில் இருப்பதாக பினாங்கு பாஸ் ஆணையர் முகமட் சாலே மான் தெரிவித்தார். கெப்பாலா பாதாசில் பலத்த போட்டியை ஏற்படுத்தக்கூடிய ஒருவரையே நாங்கள் வேட்பாளாராக தேர்ந்தெடுக்க முடியும். ஏனெனில் நாம் எதிர்க்கப் போவது பிரதமரை என்றார் அவர்.


astrology in tamil on line

All content © 2003 Rasah Jaya Hindu Youth Organisation. All rights reserved. This internet site provides online services and is designed to fulfill the webmaster HYO RASAH JAYA website.